தா.பேட்டை, மே 29: தா.பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 30ம் தேதி ரத்ததானம் முகாம் நடைபெற உள்ளது. தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 30ந்தேதி காலை 9 மணி முதல் 1.30 மணி வரை ரத்ததானம் முகாம் நடைபெற உள்ளது. தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருச்சி அரசு மருத்துவமனை, தாரா சமூக மேம்பாட்டு மையம் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து ரத்ததான முகாமை நடத்திட ஏற்பாடு செய்துள்ளது. ரத்த தானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.